Friday, June 7, 2013

மௌனப் பெருநிழல்























••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?


எண்ண ஜுவாலைகள் 
எரித்த உயிரின் சுவர்களை 
எல்லாக் கரங்களாலும் 
தொட்டுக் குளிர்விக்கும் 
நேச நிழலது ;
நான் போகிறேன் 
யார் வருகிறீர்கள் ?

புறம் பேசும் தீக்குணத்தை 
மௌன மருந்திட்டு 
மாற்றியனுப்பும் 
சிகிச்சைக்குக் போகிறேன் 
வருபவர்கள் வரலாம் !

வெறுப்பின் முதுகை 
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம் 
அன்பே சத்தியம் 
அன்பே அத்தனையுமென 
நெஞ்சில் எழுதியனுப்பும் 
மரக்கவிஞனின் 
நிழற்குடிசைக்குப் போகிறேன் 
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !

நெஞ்சுக்குள் நஞ்சேற்றும் 
பொறாமைகளைக் 
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும் 
மௌனப் பெருநிழலில் 
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?

பழிக்கும் வஞ்சமும் 
குற்றங்கானும் கூட்டமும் 
குரங்காகவே இருக்கும் 
மனிதர்களே இல்லாத 
மரநிழல் ஒன்றிருக்கிறது 
கொஞ்சம் போய் 
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !

அறிவுச்செருக்கை 
கன்னத்தில் அறைந்து 
அமைதியே பேரறிவு 
மௌனமே மாதவம் 
நிசப்தமே நிலையான நிலையென 
உணர்த்தும் குளிர்நிழல் 
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில் 
கொஞ்ச நேரம் அங்கு 
போய்விட்டு வருகிறேன் !

ஆயிரம் ஆட்டமாடி அடங்கி 
அமர்ந்திருக்கிறானே 
யாரோ ஒருவன்...
அவன் உணரும் 
நிம்மதியின் நிழல் 
எனக்கும் வேண்டும் 
நான் அவனிருக்கும் 
நிழலுக்குப் போகிறேன் !

கோடிகளில் மூழ்கிப் போன 
பணப்பிணங்கள் யாரும் 
என்னோடு வரவேண்டாம் 
கொஞ்சம் அன்பிருப்பினும் 
கொட்டிச் செலவழிக்கும் 
ஏழைகள் வாருங்கள் !

என்னோடு வாருங்கள் 
அது ஏழைகளுக்கான மரநிழல் 
அன்பானவர்களின் வாஞ்சை நிழல் 
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை 
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !

நான் போகிறேன் 
என்னோடு வருபவர்கள் வாருங்கள் 
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

மௌனப்பெரும்புயல்


••
மௌனப் பெரும்புயலொன்று மனதை 
சுழன்றடித்துக் கடந்து போனது ..
சப்தங்கள் சலனங்கள் நிறைந்த 
இயல்புக்கு மீண்டும் 
திரும்பி விட்டது வாழ்க்கை..
இருந்தும் வர்ணிக்க முடியாத 
தீராக்காதலை உயிர் முழுக்க 
ஓட்டிச் சென்ற புயலை 
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..
புயல் தரும் ஆறுதல்
பூமியில் எங்குமே இல்லை..
மௌனப்பெரும்புயல் மனதின்
மாபெரும்வரம்
மாபெரும் தவம் ..!
••

Be a Horse - ஒரு குட்டிக் கதை பெரிய்ய நீதி





••
வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..
••

You are blessed Soul then



••
நீ சிரித்துக் கொண்டே 
மரணித்தாலும் 
அழுது அத்தனை கண்ணீரையும் 
இழந்து மயங்கும் 
யாரோ ஒருவரின்
அன்பைப் பெற்றுவிட்டால் போதும்
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் !
••

Love is...



••
நேசித்தல் நூறு சுகம்..
நூறென்றால் ஆயிரம் 
ஆயிரமென்றால் லட்சம் 
லட்சமென்றால் கோடி !
••

Rumi Quote



••
இதயத்திலிருந்து வருகிற வார்த்தைகள் மட்டுமே 
இதயத்திற்குப் போய் சேரும் ! 
••
ரூமி

we admit when we get it


••
எல்லாம் கிடைத்ததன் பின் தான் நாம் அதைத் 
தீவிரமாய்த் தேடினோம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறோம் ! 
••

None cares the other side of a True love


••
பிரிகிற காதல், ஏற்கிற பழிக்குப் பின்னால் 
இருக்கிற தியாகங்களை யாருக்கும் கேட்க நேரமில்லை,விருப்பமில்லை ! 
••

தியாகமென்பது...


••
தியாகமென்பது 
ஒரு ஊமையின் ஆழ்மன அலறல் ! 
அன்பின் உயர்நிலை.
எத்தனை பழி சொல்லினும் 
அத்தனையும் பொறுத்தொரு 
நிசப்தப் பெருங்குரலெடுத்தலறும். 
வேறொன்றும் செய்யாது. 
தியாகமென்பது மௌனம்.
மௌனமென்பது வீரம்.
வீரமென்பது காதல்.
காதலென்பது வெற்றி .
வெற்றியென்பது
தான் தோற்று
பிறரை ஜெயிக்க வைப்பது !
••
பிரபா

Money is not all that matters



••
பணமும் பொருட்களும் கொடுத்த சந்தோஷம் அது போனதும் அதோடே போய்விட்டது.
அன்பும் காதலும் அதைக் கொடுத்த மனிதர்கள் இல்லாத போதும் நெஞ்சோடு நிலைத்து நிற்கிறது. 
••
# எது நிலை என்று உணர்ந்து வாழுங்கள்.

Thursday, May 2, 2013

Recent shares in Facebook


••
வாழ்வின் மிகப் பெரிய போராட்டம் .. 'நீ நீயாகவே இருக்கத் தான்'
என்கிறார் Leo F.Buscaglia.
••
# சரியா சொன்னிங்க பாஸ் !


••
நன்கு பேசத் தெரிந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாகவே அத்தனை நிமிடங்களையும் கடந்து போய் விடுகிறார்கள் ! 
••

•• பொறாமைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பாராட்டுக்கள் ••

பிரபாகரன் சேரவஞ்சி

••
தற்காலிக உணர்ச்சி வேகத்தில் நிரந்தரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் ! 
••

பிரபாகரன் சேரவஞ்சி 

••
நம்பிய பொய்கள் உண்மை தெரிந்த பின் நெஞ்சைக் கொல்லும் . 
சிரித்த உண்மைகள் என்றென்றும் நெஞ்சிலேயே தங்கிக் கொள்ளும்
••

பிரபாகரன் சேரவஞ்சி

••
கேட்கிற அனைத்தும், ஒரு கருத்து மட்டுமே , உண்மையல்ல. பார்க்கிற அனைத்தும் ஒரு பார்வையே, உண்மையல்ல. அப்போ எதுதான் உண்மை'ன்னு கேக்குறிங்களா? உண்மை பொய் எல்லாமே மாயை தான் போலிருக்கு....எது எப்டின்னு எடை போடாம ஜாலியா வாழுங்க பாஸ்.... எடை போடாம எப்டி ஜாலியா இருக்குறதுன்னு கேக்குரிங்களா .... யோவ்.. போய்யா... :) :)
          ••

 


••
சிலர் வரம் , சிலர் பாடம் . வரமாகும் மனிதர்கள் ஆழ்நெஞ்சிலும் , பாடம் சொல்லும் மனிதர்கள் மூளையிலும் தங்கிக் கொள்கிறார்கள் !
••
பிரபாகரன் சேரவஞ்சி


••
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
Isaiah 43:19
••
எல்லா கசப்புணர்வுகளும் மறையும் , வலிகள் எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும், தெளிவும் பிறக்கும்... பொறுத்திரு... உன்ன சுத்தி இருக்கிற எல்லாத்தையும் அழகா மாத்துவேன் ... புதுப்பிப்பேன்'ங்கறார் கடவுள் ...! 
••
ஏசாயா 43:19

# அப்படியே ஆகட்டும் ! ஆமென் ..



••
whenever life sucks, remember you're going to die someday ! 
••
# தக்காளி அவ்வளோதாண்டா தத்துவம் ! :)



••
"இருக்குமிடத்தில், இந்த நொடியில், இன்புற்றிரு"

-இங்கர்சால் 
••


••
எது வேண்டாமோ அதைத் தேடாமல் இரு.ஏனெனில் எது வேண்டுமோ அது உன்னைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கிறது !
••
பிரபாகரன் சேரவஞ்சி

••
'மேகம் 
கடகடவென்று சிரித்துவிட்டு 
மழையாக இறங்கியது.
நனைந்து சிலிர்த்த 
பூமி சொன்னது :
பெருமை 
மேலே ஏறுவதில் இல்லை 
கீழே இறங்குவதில் இருக்கிறது ! '
••
கவிக்கோ அப்துல் ரகுமான் 


••
எந்தத் துன்பத்திலும் தோள் கொடுக்கிற அன்பைத் தேடிக்கொள் ! எந்தக் கைகள் உன் கைகளிலிருக்கும் கவலைகளை பிடுங்கி எறிந்துவிட்டு தன்னை இணைத்துக் கொள்ளுமோ அங்கே சென்று சேர்ந்து கொள்.நிம்மதியாய் வாழ் !
••

God is one


••
நபிகள் நாயகம் ஒரு நாள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார் . அவரை சந்தித்து உரையாட ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வந்தார் . இருவரும் நீண்ட நேரம் இதயம் கலந்து பேசி மகிழ்ந்தனர் .தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்துவிட்டது .என்று கூறியபடி பாதிரியார் எழுந்தார். கொளுத்தும் வெய்யிலில் ஏன் உங்களை வருத்திக் கொள்ளவேண்டும் ?நீங்கள் விரும்பினால் இங்கேயே இறைவனை பிரார்த்திக்கலாமே' என்று நபிகள் சொன்னதும் நெஞ்சம் நெகிழ்ந்த பாதிரியார் , அந்தப் பள்ளிவாசலின் ஒரு மூலையில் முழந்தாளிட்டு தேவனைப் பிரார்த்தித்தார்.

பாதிரியார் விடைபெற்று சென்ற பின் நாயகத்தின் தோழர்கள் , ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் இங்கு பிரார்த்தனை செய்தால் பள்ளிவாசலின் தூய்மை பறிபோய்விடாதா ? என்று பதட்டத்துடன் கேட்டனர். 

' நாம் வணங்கும் இறைவனும் அவர் வணங்கிய இறைவனும் ஒருவரே ' 
என்று அமைதியாக பதிலளித்தார் நபிகளார். இந்த உணர்வும் பார்வையும் தான் நம் உயிரின் முழு முதற் தேவை !

இறைவன் ஒருவனே ! மனிதர்களை நேசியுங்கள் . அன்பில் இறைவனைக் காணுங்கள் ! 
••
படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 04

Dad is God !


••
எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.
••
Prabhakaran Cheravanji

Sunday, April 21, 2013

Bala and Vikram Inspires...


நான் ஆக்சிடெண்ட்ல அடிபட்டுக் கிடந்தப்போ , எங்க சொந்தக் காரர் ஒருத்தர் .. அவரும் சினிமாகாரர் தான் ... இனிமே நீ எங்க சினிமால நடிக்க போற ? உனக்குன்னு ஏதாவது நொண்டி காரெக்டர் கிடைக்கும்ல'ன்னு சொன்னார்.... எவ்ளோ வக்கிரமான வார்த்தை ...நாம ஜெயிக்கணும் பாலா .... 

"பழி வாங்கறதுன்னா ... அடிக்கறது, உதைக்கிறது , அவமானப் படுத்தறது , மட்டுமில்லையே .... அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும் ..."

அப்போ நான் தனியா இருந்தேன் . இப்போ கூட நீங்க இருக்கீங்க .. சேது .இருக்கான் ..நாம ஜெயிப்போம் பாலா .... ப்ராமிஸ் பாலா ! " என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் .வைத்திருப்பேன் ...

- பாலாவின் இவன்தான் பாலா புத்தகத்திலிருந்து... 

(எனக்குப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த விக்ரம் மற்றும் பாலாவின் "சேது" பிறந்த கதை செம நம்பிக்கை டானிக் (A Must read (chapter in that) Book ) )

Love begets Love


••
அன்பு என்றும் எங்கும் வீணாகிப்போவதே இல்லை... நூறு மடங்கு அதிகமாய் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் ! பொறுமையுடன், நம்பிக்கையுடன், வாஞ்சையுடன் நேசியுங்கள்....! 
••