Friday, June 7, 2013

மௌனப்பெரும்புயல்


••
மௌனப் பெரும்புயலொன்று மனதை 
சுழன்றடித்துக் கடந்து போனது ..
சப்தங்கள் சலனங்கள் நிறைந்த 
இயல்புக்கு மீண்டும் 
திரும்பி விட்டது வாழ்க்கை..
இருந்தும் வர்ணிக்க முடியாத 
தீராக்காதலை உயிர் முழுக்க 
ஓட்டிச் சென்ற புயலை 
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..
புயல் தரும் ஆறுதல்
பூமியில் எங்குமே இல்லை..
மௌனப்பெரும்புயல் மனதின்
மாபெரும்வரம்
மாபெரும் தவம் ..!
••

No comments:

Post a Comment