Friday, June 7, 2013

பூக்களைப் போல் வாழ்கிறேன்






















எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும் 
எந்த முரணுமில்லை 
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக் 
குளிர்விக்கும் 
மஞ்சள் பூக்களின் புன்னகை 
எவ்வளவு அழகோ 
அவ்வளவு அழகாய் 
அமைதியாய் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி
Inspired from a thought of Kahlil Gibraan.

No comments:

Post a Comment