Friday, June 7, 2013

தியாகமென்பது...


••
தியாகமென்பது 
ஒரு ஊமையின் ஆழ்மன அலறல் ! 
அன்பின் உயர்நிலை.
எத்தனை பழி சொல்லினும் 
அத்தனையும் பொறுத்தொரு 
நிசப்தப் பெருங்குரலெடுத்தலறும். 
வேறொன்றும் செய்யாது. 
தியாகமென்பது மௌனம்.
மௌனமென்பது வீரம்.
வீரமென்பது காதல்.
காதலென்பது வெற்றி .
வெற்றியென்பது
தான் தோற்று
பிறரை ஜெயிக்க வைப்பது !
••
பிரபா

No comments:

Post a Comment