Sunday, April 21, 2013

From Udhayakumar To Prabhakaran




அடை மழை உன் அன்பு 
முழுக்க நனைந்துவிட்டேன் 
மழைவிட்ட பின்னும் 
மண்வாசம் மிச்சமிருப்பது போல 
என்னிடம் இன்னும் ஒட்டி இருக்கிறது 
உனது வாஞ்சை 
உனது பெருங்காதல் 
உனது பேரன்பின் பெருநெடி 
உனது தூய நேசத்தின் குளிர் காற்று 

எல்லாம் எல்லாம் 
என் உயிரின் ஆழத்தில் இனிக்கிறது .
உன்னை வழியனுப்பி விட்டு 
ஏதோ ஒன்று குறைவதுபோலவே 
வீடுவந்து சேர்ந்துவிட்டேன் .

உன் ஆதூரம் 
என் மனவெளியெங்கும்
பூத்திருக்கிறது 
இளம்மஞ்சள் நிறத்தில் .
அத்தனையும் அழகு 
உனதன்பை போலவே :-)

No comments:

Post a Comment