Thursday, May 2, 2013

Recent shares in Facebook


••
வாழ்வின் மிகப் பெரிய போராட்டம் .. 'நீ நீயாகவே இருக்கத் தான்'
என்கிறார் Leo F.Buscaglia.
••
# சரியா சொன்னிங்க பாஸ் !


••
நன்கு பேசத் தெரிந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாகவே அத்தனை நிமிடங்களையும் கடந்து போய் விடுகிறார்கள் ! 
••

•• பொறாமைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பாராட்டுக்கள் ••

பிரபாகரன் சேரவஞ்சி

••
தற்காலிக உணர்ச்சி வேகத்தில் நிரந்தரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் ! 
••

பிரபாகரன் சேரவஞ்சி 

••
நம்பிய பொய்கள் உண்மை தெரிந்த பின் நெஞ்சைக் கொல்லும் . 
சிரித்த உண்மைகள் என்றென்றும் நெஞ்சிலேயே தங்கிக் கொள்ளும்
••

பிரபாகரன் சேரவஞ்சி

••
கேட்கிற அனைத்தும், ஒரு கருத்து மட்டுமே , உண்மையல்ல. பார்க்கிற அனைத்தும் ஒரு பார்வையே, உண்மையல்ல. அப்போ எதுதான் உண்மை'ன்னு கேக்குறிங்களா? உண்மை பொய் எல்லாமே மாயை தான் போலிருக்கு....எது எப்டின்னு எடை போடாம ஜாலியா வாழுங்க பாஸ்.... எடை போடாம எப்டி ஜாலியா இருக்குறதுன்னு கேக்குரிங்களா .... யோவ்.. போய்யா... :) :)
          ••

 


••
சிலர் வரம் , சிலர் பாடம் . வரமாகும் மனிதர்கள் ஆழ்நெஞ்சிலும் , பாடம் சொல்லும் மனிதர்கள் மூளையிலும் தங்கிக் கொள்கிறார்கள் !
••
பிரபாகரன் சேரவஞ்சி


••
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
Isaiah 43:19
••
எல்லா கசப்புணர்வுகளும் மறையும் , வலிகள் எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும், தெளிவும் பிறக்கும்... பொறுத்திரு... உன்ன சுத்தி இருக்கிற எல்லாத்தையும் அழகா மாத்துவேன் ... புதுப்பிப்பேன்'ங்கறார் கடவுள் ...! 
••
ஏசாயா 43:19

# அப்படியே ஆகட்டும் ! ஆமென் ..



••
whenever life sucks, remember you're going to die someday ! 
••
# தக்காளி அவ்வளோதாண்டா தத்துவம் ! :)



••
"இருக்குமிடத்தில், இந்த நொடியில், இன்புற்றிரு"

-இங்கர்சால் 
••


••
எது வேண்டாமோ அதைத் தேடாமல் இரு.ஏனெனில் எது வேண்டுமோ அது உன்னைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கிறது !
••
பிரபாகரன் சேரவஞ்சி

••
'மேகம் 
கடகடவென்று சிரித்துவிட்டு 
மழையாக இறங்கியது.
நனைந்து சிலிர்த்த 
பூமி சொன்னது :
பெருமை 
மேலே ஏறுவதில் இல்லை 
கீழே இறங்குவதில் இருக்கிறது ! '
••
கவிக்கோ அப்துல் ரகுமான் 


••
எந்தத் துன்பத்திலும் தோள் கொடுக்கிற அன்பைத் தேடிக்கொள் ! எந்தக் கைகள் உன் கைகளிலிருக்கும் கவலைகளை பிடுங்கி எறிந்துவிட்டு தன்னை இணைத்துக் கொள்ளுமோ அங்கே சென்று சேர்ந்து கொள்.நிம்மதியாய் வாழ் !
••

God is one


••
நபிகள் நாயகம் ஒரு நாள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார் . அவரை சந்தித்து உரையாட ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வந்தார் . இருவரும் நீண்ட நேரம் இதயம் கலந்து பேசி மகிழ்ந்தனர் .தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்துவிட்டது .என்று கூறியபடி பாதிரியார் எழுந்தார். கொளுத்தும் வெய்யிலில் ஏன் உங்களை வருத்திக் கொள்ளவேண்டும் ?நீங்கள் விரும்பினால் இங்கேயே இறைவனை பிரார்த்திக்கலாமே' என்று நபிகள் சொன்னதும் நெஞ்சம் நெகிழ்ந்த பாதிரியார் , அந்தப் பள்ளிவாசலின் ஒரு மூலையில் முழந்தாளிட்டு தேவனைப் பிரார்த்தித்தார்.

பாதிரியார் விடைபெற்று சென்ற பின் நாயகத்தின் தோழர்கள் , ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் இங்கு பிரார்த்தனை செய்தால் பள்ளிவாசலின் தூய்மை பறிபோய்விடாதா ? என்று பதட்டத்துடன் கேட்டனர். 

' நாம் வணங்கும் இறைவனும் அவர் வணங்கிய இறைவனும் ஒருவரே ' 
என்று அமைதியாக பதிலளித்தார் நபிகளார். இந்த உணர்வும் பார்வையும் தான் நம் உயிரின் முழு முதற் தேவை !

இறைவன் ஒருவனே ! மனிதர்களை நேசியுங்கள் . அன்பில் இறைவனைக் காணுங்கள் ! 
••
படிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 04

Dad is God !


••
எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.
••
Prabhakaran Cheravanji

Sunday, April 21, 2013

Bala and Vikram Inspires...


நான் ஆக்சிடெண்ட்ல அடிபட்டுக் கிடந்தப்போ , எங்க சொந்தக் காரர் ஒருத்தர் .. அவரும் சினிமாகாரர் தான் ... இனிமே நீ எங்க சினிமால நடிக்க போற ? உனக்குன்னு ஏதாவது நொண்டி காரெக்டர் கிடைக்கும்ல'ன்னு சொன்னார்.... எவ்ளோ வக்கிரமான வார்த்தை ...நாம ஜெயிக்கணும் பாலா .... 

"பழி வாங்கறதுன்னா ... அடிக்கறது, உதைக்கிறது , அவமானப் படுத்தறது , மட்டுமில்லையே .... அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும் ..."

அப்போ நான் தனியா இருந்தேன் . இப்போ கூட நீங்க இருக்கீங்க .. சேது .இருக்கான் ..நாம ஜெயிப்போம் பாலா .... ப்ராமிஸ் பாலா ! " என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் .வைத்திருப்பேன் ...

- பாலாவின் இவன்தான் பாலா புத்தகத்திலிருந்து... 

(எனக்குப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த விக்ரம் மற்றும் பாலாவின் "சேது" பிறந்த கதை செம நம்பிக்கை டானிக் (A Must read (chapter in that) Book ) )

Love begets Love


••
அன்பு என்றும் எங்கும் வீணாகிப்போவதே இல்லை... நூறு மடங்கு அதிகமாய் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் ! பொறுமையுடன், நம்பிக்கையுடன், வாஞ்சையுடன் நேசியுங்கள்....! 
••

Appreciate !


••
பாராட்டுவது மிகக்கடினமான செயல். அதை விடக் கடினமானது அதற்கான சரியான வார்த்தைகளையும் மனிதர்களையும் தேர்ந்தெடுப்பது. அதைவிடக் கடினமானது 'நான் பெரியவன்' என்கிற மனநிலை கடந்து ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்ற மன நிலைக்கு வருவது.
••
# தேர்ந்தெடுத்துச் செய்து பழகிக் கொண்டிருக்கிறேன்.
It doesn't seems to be a Tough job really. Life is all about appreciating Things and People who deserve it in a right time/place. Do appreciate ppl if you feel something is good with them.

DwellInHappiness#17

From Udhayakumar To Prabhakaran




அடை மழை உன் அன்பு 
முழுக்க நனைந்துவிட்டேன் 
மழைவிட்ட பின்னும் 
மண்வாசம் மிச்சமிருப்பது போல 
என்னிடம் இன்னும் ஒட்டி இருக்கிறது 
உனது வாஞ்சை 
உனது பெருங்காதல் 
உனது பேரன்பின் பெருநெடி 
உனது தூய நேசத்தின் குளிர் காற்று 

எல்லாம் எல்லாம் 
என் உயிரின் ஆழத்தில் இனிக்கிறது .
உன்னை வழியனுப்பி விட்டு 
ஏதோ ஒன்று குறைவதுபோலவே 
வீடுவந்து சேர்ந்துவிட்டேன் .

உன் ஆதூரம் 
என் மனவெளியெங்கும்
பூத்திருக்கிறது 
இளம்மஞ்சள் நிறத்தில் .
அத்தனையும் அழகு 
உனதன்பை போலவே :-)

Taste your words before you give it to others


••
பிறர்க்குப் படைக்கும் முன், ஒருமுறை உங்கள் வார்த்தைகளை நீங்களே ருசித்துவிட்டுப் படையுங்கள் !
••
Wisdom Quote

Fake Love



எது பொய்யோ 
அதை நிறைய 
நேசிக்க கற்றுக் 
கொண்டுவிட்டது 
உலகம் ! 
எது நிஜமோ 
அதைச் சரியாக 
சந்தேகிக்கவும் !

Prabhakaran Cheravanji 

Quotes of Prabha


••
ஒருவர் தங்கள் நியாயங்களுக்கேற்ப உங்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்கிற போது . அன்போடு பொறுத்திருங்கள். அவர்களின் நியாயங்கள் அன்றாடம் மாறும் தன்மையுடவை. அவை மாறிக் கொண்டே போகும் .நீங்கள் மாறாத தன்மை உடையவர்கள் வருந்தவும் தேவை இல்லை.மாறவும் தேவை இல்லை.
••

Celeberate your life.


••
வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் கடவுள் நிறைந்து இருக்கிறார் 
••
OSHO

World is ready to hear only from those who were already so popular.



கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார், ”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்
நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்

.அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

இன்னும் கொஞ்சம் சிரி


••
கொஞ்சம் சிரி , அதன் பின் இன்னும் கொஞ்சம் நிறையவே சிரி , அதன் பின்னும் இன்னும் கொஞ்சம். வெற்றியை எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய் , ஆறுதலை எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய். எல்லாமே உன் சிரிப்பு தான். இன்னும் கொஞ்சம் சிரி ! :)
••
Smile , cuz that's the Path of life

People who cannot kill you dreams assasiinate your character


••
உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் , கொல்ல முடியாத மனிதர்கள், பண்புகளையும், குணநலன்களையும் கொலை செய்யப் பார்ப்பார்கள்.
••
படிச்சது ! 

Path to nowhere -சூன்யத்தை நோக்கி ஒரு பயணம்



••
அற்ப சுகங்களை அடைதலுக்கு முன்னும் இழப்பதற்குப் பின்னும் இருக்கிற சமநிலை நிழலில் இளைப்பாறப் பயணித்துக் கொண்டிருக்கிறது மனம். அங்கு கிளைபரப்பிப் படர்ந்திருக்கும் மௌனத்தின் நிழலில் எத்தனை சந்தோஷம் இருக்கும்.!!! வேகத்தின் உச்சம் எவ்வளவோ அவ்வளவு வேகத்தில் சென்றங்கு சேர வேண்டும். எல்லாம் இருப்பதை விட எதுவும் இல்லாமல் இருப்பதில் இருக்கும் வாழ்க்கையின் தத்துவம் கற்றறிய வேண்டும்.
••
# Taking the air towards the 'Emptiness' - The Real path of Life!